Sunday 19th of May 2024 05:30:06 AM GMT

LANGUAGE - TAMIL
.
முல்லைத்தீவில் தானிய களஞ்சியத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு!

முல்லைத்தீவில் தானிய களஞ்சியத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு!


வடக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் தானிய களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று(16) மு.ப 9.30 மணியளவில் வைபவ ரீதியாக நாட்டிவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் பி.எம்.எஸ் சாள்ஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

உலகவங்கியின் நிதி அனுசரணையுடன் ரூபா 137 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இக் கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர், வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE